செய்திகள்
தென்காசி அருகே தனியார் வங்கி அதிகாரி மனைவியிடம் நகை பறிப்பு
தென்காசி அருகே தனியார் வங்கி அதிகாரி மனைவியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி அருகே உள்ள கீழ இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோபன்ராஜ், தனியார் வங்கி அதிகாரி.இவரது மனைவி செய்யதலி பாத்திமா (27). இவர் இன்று காலை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மர்மநபர் இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.