செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் வசந்தகிருஷ்ணன் (வயது 26). சம்பவத்தன்று இவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வசந்த கிருஷ்ணன் இறந்து விட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.