செய்திகள்
மணல் கடத்தல்

மெலட்டூர் அருகே மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

Published On 2019-11-19 11:53 GMT   |   Update On 2019-11-19 11:53 GMT
மெலட்டூர் அருகே மணல் கடத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மெலட்டூர்:

பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள வெண்ணுகுடி தோட்டம் பகுதியில் மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது வெண்ணாற்றில் இருந்து சரக்கு வாகனத்தில் சிலர் அனுமதி இன்றி மணல் அள்ளி கொண்டு இருந்தனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் மணல் அள்ளிய வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். சரக்கு வாகனத்தை கைபற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மணல் அள்ள பயன்படுத்திய வாகனம் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான என தெரியவந்தது.

இதுகுறித்து வாகன உரிமையாளர் மீது போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News