ஆன்மிகம்
புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
அழகப்பபுரம் அருகே இந்திரா நகர் புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலயத்தில் 10 நாள் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
அழகப்பபுரம் அருகே இந்திரா நகர் புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலயத்தில் 10 நாள் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறும்.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது. 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.15 மணிக்கு சப்பர பவனி, தொடர்ந்து அருட்பணியாளர் செல்வ ஜார்ஜ் தலைமையில் மாலை ஆராதனை, 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு மயிலாடி பங்குத்தந்தை ஆன்டனி பென்சிகர் தலைமையில் திருவிழா திருப்பலி ஆகியவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை ஜெய ஆன்றோ சர்ச்சில் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது. 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.15 மணிக்கு சப்பர பவனி, தொடர்ந்து அருட்பணியாளர் செல்வ ஜார்ஜ் தலைமையில் மாலை ஆராதனை, 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு மயிலாடி பங்குத்தந்தை ஆன்டனி பென்சிகர் தலைமையில் திருவிழா திருப்பலி ஆகியவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை ஜெய ஆன்றோ சர்ச்சில் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.