செய்திகள்
விராட் கோலிக்கு தடுப்பூசி செலுத்தும் காட்சி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விராட் கோலி

Published On 2021-05-10 08:37 GMT   |   Update On 2021-05-10 08:37 GMT
வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, அவரது மனைவி பிரதிமா சிங் ஆகியோரும் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
புதுடெல்லி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. தினந்தோறும்  லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே உள்ள அச்ச உணர்வை போக்கும் வகையில் பிரபலங்கள் பலரும் முறையாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

அவ்வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி உள்ளார். தடுப்பூசி போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள விராட் கோலி, அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, அவரது மனைவி பிரதிமா சிங் ஆகியோரும் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கடந்த வாரம் உமேஷ் யாதவ், அஜிங்கியா ரகானே, ஷிகர் தவான் ஆகியோரும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News