செய்திகள்
தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
பூக்கள் விலை உயர்ந்தபோதிலும் வியாபாரிகளும், பொது மக்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பூக்களை வாங்குவதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.
ஆரல்வாய்மொழி:
குமரிமாவட்டம் தோவாளையில் மலர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்துதான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
தோவாளை, ஆரல்வாய்மொழி, குமாரபுரம், மாடநாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பூச்சி பூ, சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரு பகுதியிலிருந்து பட்டர் ரோஸ், மஞ்சள்கிரோந்தி, ராஜபாளையம், வத்தல்குண்டு, மானாமதுரை, கொடைரோடு, சங்கரன்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூக்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஆரல்வாய் மொழி, செண்பகராமன்புதூர், தோப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரளி, சம்பங்கி, ரோஜா, பச்சை துளசி, கோழிப்பூ ஆகியவை இந்த சந்தைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை ஆகி வருகிறது.
இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மலர் சந்தைக்கு கடந்த சிலநாட்களாக பூக்கள் வருவது குறைந்துள்ளது. மழை காரணமாக செடிகளில் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளதே இதற்கு காரணம். இதனால் பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தோவாளை மலர் சந்தையில் நேற்று ஒரு கிலோ கிரேந்தி ரூ.90, அரளி ரூ.330, ரோஜா ரூ.130, துளசி ரூ.30, வாடமல்லி ரூ.130 மற்றும் பிச்சி ரூ.550-க்கும் மல்லிகை ரூ.600-க்கும் விற்பனை ஆனது. விலை உயர்ந்தபோதிலும் வியாபாரிகளும், பொது மக்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பூக்களை வாங்குவதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.
குமரிமாவட்டம் தோவாளையில் மலர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்துதான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
தோவாளை, ஆரல்வாய்மொழி, குமாரபுரம், மாடநாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பூச்சி பூ, சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரு பகுதியிலிருந்து பட்டர் ரோஸ், மஞ்சள்கிரோந்தி, ராஜபாளையம், வத்தல்குண்டு, மானாமதுரை, கொடைரோடு, சங்கரன்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூக்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஆரல்வாய் மொழி, செண்பகராமன்புதூர், தோப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரளி, சம்பங்கி, ரோஜா, பச்சை துளசி, கோழிப்பூ ஆகியவை இந்த சந்தைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை ஆகி வருகிறது.
இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மலர் சந்தைக்கு கடந்த சிலநாட்களாக பூக்கள் வருவது குறைந்துள்ளது. மழை காரணமாக செடிகளில் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளதே இதற்கு காரணம். இதனால் பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தோவாளை மலர் சந்தையில் நேற்று ஒரு கிலோ கிரேந்தி ரூ.90, அரளி ரூ.330, ரோஜா ரூ.130, துளசி ரூ.30, வாடமல்லி ரூ.130 மற்றும் பிச்சி ரூ.550-க்கும் மல்லிகை ரூ.600-க்கும் விற்பனை ஆனது. விலை உயர்ந்தபோதிலும் வியாபாரிகளும், பொது மக்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பூக்களை வாங்குவதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.