செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது- முதலமைச்சர்

Published On 2020-12-14 05:54 GMT   |   Update On 2020-12-14 05:54 GMT
நாட்டிலேயே சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

தமிழகத்தில் 2000 மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

* நாட்டிலேயே சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

* மருத்துவத் துறையில் தொடர்ந்து தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

* 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி சாதனை படைத்துள்ளோம்.

* மருத்துவக் கல்லூரிகளை அதிகரித்ததன் மூலம் 5,300 பேர் மருத்துவம் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.

* இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

* ரூ.120 கோடியில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

* தனியார் மருத்துவமனைகளைவிட உயர்தர சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News