செய்திகள்
8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மதுரை, தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவ.23-ந்தேதி நாகை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மதுரை, தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவ.23-ந்தேதி நாகை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.