செய்திகள்
சரத்குமார்

அரசியல் நிலைப்பாடு: சரத்குமார் மாவட்ட நிர்வாகிகளுடன் 22-ந்தேதி முதல் ஆலோசனை

Published On 2020-12-30 11:30 GMT   |   Update On 2020-12-30 11:30 GMT
ஜனவரி 22-ந் தேதி முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கேட்க உள்ளேன். அதன் பின்னர் அரசியல் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

காஞ்சீபுரம்:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரது மனைவி ராதிகா உடன் வந்து இருந்தார்.

ரஜினிகாந்த் அவருடைய சொந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவரின் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. அவரது உடல் நலம் என்றும் சிறப்பாக இருக்கவேண்டும். கலை உலக பயணமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் எடுத்து வைக்கின்ற அனைத்து பணிகளும் சிறப்பாக நலமாக என்றும் இருக்க வேண்டும்.

வருகிற ஜனவரி 22-ந் தேதி முதல் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கேட்கிறேன். அதன் பின்னர் அரசியல் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News