உள்ளூர் செய்திகள்
தீ

காட்டுமன்னார்கோவில் அருகே பேக்கரி குடோனில் தீ விபத்து

Published On 2022-04-16 09:15 GMT   |   Update On 2022-04-16 09:15 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே பேக்கரி குடோனில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில்:

காட்டுமன்னார்கோவில் அருகே பாலக்கரையில் வேலு என்பவருக்கு சொந்தமான பேக்கரிகடை உள்ளது. இந்த கடைக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பதற்காக அருகிலேயே குடோன் உள்ளது. நேற்று இரவு இந்த குடோனில் இருந்து புகை பரவியது. இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அருகில் இருந்த மற்ற கடைகள், வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News