செய்திகள்
ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? ஸ்டாலின் நாளை ஆலோசனை
ஊரடங்கை மேலும் நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி காலை 6 மணி வரை அமலில் இருந்தது.
இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு சுகாதாரத்துறையினருடன் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கை மேலும் நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.