ஆன்மிகம்
பழனி அழகுநாச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

பழனி அழகுநாச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-01-08 04:35 GMT   |   Update On 2021-01-08 04:35 GMT
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலனுக்காக ஆனந்த விநாயகர் சன்னதி, வீரதுர்க்கையம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பழனி மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதி மற்றும் நான்கு கிரிவீதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆனந்த விநாயகர் சன்னதி, வீரதுர்க்கையம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 

இந்தநிலையில் நேற்று பழனி கிழக்கு கிரிவீதியில் உள்ள அழகுநாச்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அங்கு கலசபூஜை, புண்ணியாக வாஜனம், பாராயணம், கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்படி, உதவி ஆணையர் செந்தில்குமார், நிகழ்ச்சி உபயதாரர் கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News