உள்ளூர் செய்திகள்
.

சூளகிரி பகுதியில் புதினா விலை கடும் சரிவு ஆற்றங்கரையோரம் வீசி விவசாயிகள் வேதனை

Published On 2022-04-17 07:31 GMT   |   Update On 2022-04-17 07:31 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் புதினா விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் புதினாவை ஆற்றங்கரையோரம் வீசி சென்றனர்.
சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரத்தில் சூளகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு சாகுபடி செய்யப் படும் புதினா தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக, கேரளா, ஆந்திர மாநிலங் களுக்கும் நேரி டையாக புதுச்சேரி மாநிலங் களுக்கும் லாரி, மினிலாரி, உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் ஏற்றுமதி செய்யப் படுவது வழக்கம்.

கடந்த 2 மாதங்களாக புதினா விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சூளகிரி அடுத்த கனஜ்ஜுர் பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘‘புதினா விலை கடந்தத ஜனவரி மாத இறுதியில் இருந்து சரிந்து உள்ளது.

 ஒரு ஏக்கரில் புதினா பயிரிட ரூ.2 ஆயிரம் செல வாகிறது. 90 நாட்களுக்குள் வளர்ந்து விளைச்சல் தரும் புதினாவுக்கு விலை இல்லாததால் செலவு செய்த பணம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. 200 புதினா கட்டுகள் அடங்கிய ஒரு மூட்டை 1000 ரூபாய் வரை விற்ற நிலையில் தற்போது மூட்டை 100 ரூபாய்க்கு கூட விற்பதில்லை.

ஆற்றங்கரையோரம் புதினாவை வாங்க வியா பாரிகளும் வராததால் அறுவடைக்கு தயாரான புதினா நிலங்களில் வீணாகி  வருவதை தடுக்க புதினா செடிகளை பறித்து ஆற்றங் கரை யோரத்தில் கொட்டி வருகிறோம்’’ என்றனர்.
Tags:    

Similar News