செய்திகள்
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலி
ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகன் நவீன் (24). இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்கு இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்தபோது ஒரத்த நாட்டிலிருந்து தென்னமநாடு மாரியம்மன் கோவில் நோக்கி வந்த இருசக்கர வாகனம் நவீன் வாகனம் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நவீன் இறந்தார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த தேவேந்திரன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகன் நவீன் (24). இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்கு இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்தபோது ஒரத்த நாட்டிலிருந்து தென்னமநாடு மாரியம்மன் கோவில் நோக்கி வந்த இருசக்கர வாகனம் நவீன் வாகனம் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நவீன் இறந்தார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த தேவேந்திரன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.