செய்திகள்

அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் பிரச்சினைகளை எளிதில் கையாள முடியும்- சகாயம் பேட்டி

Published On 2018-12-02 14:36 GMT   |   Update On 2018-12-02 14:36 GMT
அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் பிரச்சினைகளை எளிதில் கையாள முடியும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். #sagayam #tngovt #honest

கோவை:

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நான் பொறுப்பில் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்பட்டு வருகிறது என கூற இயலாது.

பொன் மாணிக்கவேல் விவகாரம் தொடர்பாக, நான் இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அரசு துறையில் இருக்கிற காரணத்தால் எதுவும் கூற இயலாது.

எங்களை போன்ற அலுவலர்களை எங்கே பணியமர்த்த வேண்டும் என்ற அதிகாரம் அரசுக்கு உள்ளது. எந்த பணியிடம் அளித்தாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் இந்த பிரச்சினையை எளிதில் கையாள முடியும் என்றார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது பதவியை தொடர உயர்நீதிமன்றத்தை நாட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அனைத்து நிர்வாகப் பிரச்சினைகளுக்கும் நாம் அரசிடம் தான் தீர்வுக்காக எதிர்பார்க்க முடியும். உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்றார். #sagayam #tngovt  #honest

Tags:    

Similar News