செய்திகள்
திருட்டு

குளச்சல் அருகே பள்ளி பூட்டை உடைத்து 12 லேப்-டாப் திருட்டு

Published On 2019-11-28 16:14 GMT   |   Update On 2019-11-28 16:14 GMT
குளச்சல் அருகே மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 12 லேப்-டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
நாகர்கோவில்:

குளச்சல் அருகே குன்னங்கல் பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 25 அரசு இலவச லேப்- டாப் வழங்கப்பட்டு இருந்தது. இந்த லேப்-டாப்களை பள்ளியின் ஒரு அறையில் வைத்திருந்தனர். சம்பவத்தன்று பள்ளி முடிந்த பின்னர் வகுப்பறைகளை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் மறுநாள் பள்ளிக்கூடத்தை திறப்பதற்காக ஆசிரியர்கள் வந்தனர். அப்போது பள்ளி வகுப்பறையில் லேப்-டாப் வைக்கப்பட்டு இருந்த அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் குறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த திருட்டு குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லால், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது பள்ளியில் புகுந்த திருடர்கள் லேப்-டாப் இருந்த அறை பூட்டை உடைத்து அங்கிருந்த 12 லேப்-டாப்களை திருடி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News