ஆன்மிகம்
பூஜை

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது

Published On 2021-11-08 05:03 GMT   |   Update On 2021-11-08 05:03 GMT
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலசந்தி, விளா பூஜை ஆகியவை நடைபெற்று வருகிறது. தினமும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

5-ம் திருநாளான இன்று(திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு கோவில் மேல வாசலில் உள்பிரகாரத்தில் வைத்து தாரகாசுரன் வதம் நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) சஷ்டியை முன்னிட்டு பகல் 11 மணிக்கு சண்முக அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவில் மேலவாசல் உள்பிரகாரத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

12-ந் தேதி இரவு கழுகாசலமூர்த்தி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 14-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நிறைவு பெறுகிறது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கோவில் தலைமை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News