செய்திகள்
கூட்டத்தில் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியபோது எடுத்த படம்.

தீபாவளி போனஸ் கூடுதலாக வழங்க வேண்டும் - பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம்

Published On 2021-10-18 09:31 GMT   |   Update On 2021-10-18 09:31 GMT
போனஸ் வழங்காமல் காலம் கடத்தும் நிறுவனங்களில் வேலை நிறுத்தம் செய்து போனஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர்:
 
கோவை, திருப்பூர் மாவட்ட பனியன் தொழிலாளர் முன்னேற்றசங்க செயற்குழு கூட்டம் குமரன் ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 

பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் பூபதி, துணைச் செயலாளர் தங்கராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பனியன் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கடந்த ஆண்டை விட கூடுதலாக வழங்க வேண்டும்.10 நாட்களுக்கு முன்பு வழங்க வேண்டும். 

போனஸ் வழங்காமல் காலம் கடத்தும் நிறுவனங்களில் வேலை நிறுத்தம் செய்து போனஸ் பெறுவது, தொழிலாளர்கள் போனஸ் பெறும் போது கணக்கு முடித்து வாங்குவதை கைவிட வேண்டும். பண்டிகை விடுமுறை, ஓய்வு விடுமுறை போன்றவற்றை கேட்டு பெற வேண்டும். 

ஒப்பந்தப்படி சம்பள உயர்வை பனியன் தொழிலாளர்கள் கேட்டு பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News