செய்திகள்
கொரோனா பரிசோதனை

முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

Published On 2021-09-01 18:28 GMT   |   Update On 2021-09-01 18:28 GMT
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் குமார் மேற்பார்வையில் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன், மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நேற்று வல்லம் பஸ் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலைகளில் முக கவசம் அணியாமல் கார், இருசக்கர வாகனம், ஷேர் ஆட்டோக்கள் உள்பட பல வாகனங்களில் வந்தவர்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News