செய்திகள்
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து முக ஸ்டாலின் பேசிய காட்சி.

தேர்தலுக்காக மட்டும் வந்து செல்பவர்கள் அல்ல நாங்கள் -மு.க.ஸ்டாலின் பிரசாரம்

Published On 2019-08-02 13:53 GMT   |   Update On 2019-08-02 13:53 GMT
தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள், 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
வேலூர்:

வேலூர் உமராபாத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை ஒருமுறை கூட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை.

தேர்தலுக்காக மட்டும் வந்து செல்பவர்கள் அல்ல நாங்கள், 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வருகிறோம். 

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது திமுக தான்.

திமுக கூட்டணியில் 38 பேர் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தை கலக்குகிறார்கள்.

நடக்க வேண்டிய தேர்தலை நிறுத்தி இருக்கலாம், 5-ம் தேதி நடக்கும் தேர்தலில் வெல்வது நாம் தான். ரெய்டு என்ற பெயரில் நாடகத்தை நடத்தி ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்தலை ரத்து செய்தனர்.

வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. கருணாநிதியை அவமானப்படுத்துவதாக நினைத்து அப்துல்கலாமை கொச்சைப்படுத்தி உள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் கூறியது உண்மை என்றால் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அரசியலை விட்டு விலக வேண்டும். உண்மையை ஓபிஎஸ் நிரூபிக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News