செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பலி குறையாததால் பொதுமக்கள் கவலை

Published On 2021-06-11 09:19 GMT   |   Update On 2021-06-11 09:19 GMT
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று 897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 37-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் நேற்று பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 612-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது தொற்று கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை குறையாமல் உள்ளது பொதுமக்கள், அதிகாரிகளை கவலையடைய செய்துள்ளது.
Tags:    

Similar News