செய்திகள்
மருந்துக்கடைகளில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்த காட்சி.

வெள்ளகோவில் மருந்து கடைகளில் மருத்துவ குழுவினர் ஆய்வு

Published On 2021-09-14 11:00 GMT   |   Update On 2021-09-14 11:00 GMT
ஆய்வின் போது மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது என்பதை அனைத்து மருந்து கடைகளுக்கும் எடுத்துக்கூறினர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள தனியார் மருந்தகங்களில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ லட்சுமி தலைமையில் டாக்டர். கவுதம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் வட்டார குடும்பநல மேற்பார்வையாளர் பெரியசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது என்பதை அனைத்து மருந்து கடைகளுக்கும் எடுத்துக்கூறினர். தாய் சேய் நலத்தை பாதுகாக்கும் வகையில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு மாத்திரைகள் வினியோகிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
Tags:    

Similar News