ஆட்டோமொபைல்
சியோமி

ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் - கார் உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் சியோமி

Published On 2021-11-29 11:29 GMT   |   Update On 2021-11-29 11:29 GMT
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கார் உற்பத்தி ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.


சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி பீஜிங் நகரில் புதிதாக கார் உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆலையில் சியோமி எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

இரண்டு கட்டங்களாக சியோமி உற்பத்தி ஆலை உருவாக்கப்படுகிறது. இதுதவிர தலைமையகம், விற்பனை, ஆய்வு பணிகளுக்கான அலுவலகங்களை சியோமி கட்டமைக்க இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு இந்த ஆலை முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. 

புதிய எலெக்ட்ரிக் கார் பிரிவில் சியோமி நிறுவனம் ஆயிரம் கோடி டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய வியாபரத்தை சியோமி பதிவு செய்தது.
Tags:    

Similar News