செய்திகள்
கைது

வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது

Published On 2021-11-02 02:52 GMT   |   Update On 2021-11-02 02:52 GMT
வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, மிளகாய் பொடி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் குற்றச்சம்பவங்களை தடுக்க ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் மேற்பார்வையில் இரவு ரோந்துப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிலர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களை சோதனை செய்தபோது, 2 கத்தி, மிளகாய் பொடி இருந்தது. இதையடுத்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் துலுக்கானத்தமன் நகரை சேர்ந்த வீரப்பன் என்கிற சந்துரு (25), பரூக் என்கிற முகமது பரூக் (28), புகழேந்தி (21), நைனார் மண்டபத்தை சேர்ந்த சத்யராஜ் (21), செபஸ்டின் (19) என்பதும், ஏரிக்கரை வழியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்யும் நோக்கத்துடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதில் வீரப்பன், பரூக், புகழேந்தி ஆகிய 3 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பிடிபட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News