செய்திகள்
அபராதம்

பரமத்திவேலூரில் சரக்கு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி வந்த டிரைவருக்கு அபராதம்

Published On 2021-05-15 11:16 GMT   |   Update On 2021-05-15 11:16 GMT
கொரோனா தடுப்பு விதிகளை மீறி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பரமத்திவேலூர்:

பரமத்திவேலூ 4 ரோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் சரக்கு ஆட்டோவில் முககவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு துணை போலீஸ்சூப்பிரண்டு முககவசங்களை வழங்கி எச்சரித்தார்.
Tags:    

Similar News