செய்திகள்
தற்கொலை

பாபநாசத்தில் வி‌ஷம் குடித்து லோடுமேன் தற்கொலை

Published On 2021-08-10 10:24 GMT   |   Update On 2021-08-10 10:24 GMT
பாபநாசத்தில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்றும் குணமாகாததால் லோடுமேன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாபநாசம்:

பாபநாசம் தாலுகா ஆபீஸ் ரோடு சிங்காரபுரம் பகுதியில் வசித்து வந்தவர் பாண்டியன் (வயது 50). இவர் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பாண்டியன் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் மனமுடைந்து வயலுக்கு வைத்திருந்த வி‌ஷ பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

இது குறித்து அவருடைய மகள் பிரியங்கா கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News