செய்திகள்
கைது

கோவையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

Published On 2021-07-21 11:27 GMT   |   Update On 2021-07-21 11:27 GMT
கோவையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(28). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் ரோட்டில் சென்றார். அப்போது அவ்வழியாக எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மணிகண்டனை வழிமறித்தனர். பின்னர் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள் ரூ.1,500 மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பியோடி விட்டனர்.

இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புலியகுளத்தை சேர்ந்த பிரதீபன்(22), சவுரிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கார்த்திகேயன்(21) ஆகியோரை கைது செய்து, பணம், செல்போனை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News