ஆன்மிகம்
மஞ்சக்குப்பம் தர்காவில் கந்தூரி விழா: சந்தனகூடு ஊர்வலம் இன்று நடக்கிறது
கடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி சாலையில் சைய்யிதினா முகமத் காலப்ஷாஹ் அவுலியா தர்கா கந்தூரி விழாவின் 2-வது நாளான இன்று(புதன்கிழமை) சந்தனகூடு ஊர்வலம் நடக்கிறது.
கடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி சாலையில் சைய்யிதினா முகமத் காலப்ஷாஹ் அவுலியா தர்கா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை குர்ஆன் ஷரீப் மற்றும் துவா தொழுகை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாதி, மத பாகுபாடு இன்றி பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவின் 2-வது நாளான இன்று(புதன்கிழமை) சந்தனகூடு ஊர்வலம் நடக்கிறது. மாலை 6 மணியளவில் தர்காவில் இருந்து புறப்படும் சந்தன கூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தர்காவை வந்தடைகிறது. பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக் கிறது. நாளை(வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை விளக்கேற்றும் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சைய்யிதினா முகமத் காலப் ஷாஹ் அவுலியா தர்கா உரிமையாளர்கள் மற்றும் விழாகுழுவினர் செய்து வருகிறார்கள்.
விழாவின் 2-வது நாளான இன்று(புதன்கிழமை) சந்தனகூடு ஊர்வலம் நடக்கிறது. மாலை 6 மணியளவில் தர்காவில் இருந்து புறப்படும் சந்தன கூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தர்காவை வந்தடைகிறது. பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக் கிறது. நாளை(வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை விளக்கேற்றும் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சைய்யிதினா முகமத் காலப் ஷாஹ் அவுலியா தர்கா உரிமையாளர்கள் மற்றும் விழாகுழுவினர் செய்து வருகிறார்கள்.