செய்திகள்
பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் - கோப்புப்படம்

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி

Published On 2020-05-20 14:48 GMT   |   Update On 2020-05-20 14:48 GMT
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தினர் ஆயுதம் ஏந்தி அந்த நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் அங்கு சில பயங்கரவாத அமைப்புகளும் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பலுசிஸ்தான் மாகாணத்தின் பிர் ஹாபிப் நகரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ராணுவவீரர்களின் ரோந்து வாகனம் சிக்கியது. 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இதற்கிடையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த 2 தாக்குதல்களுக்கும் உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. 
Tags:    

Similar News