உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டியது

Published On 2022-01-13 09:04 GMT   |   Update On 2022-01-13 09:04 GMT
புதுவையில் கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில்  4 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக ஆயிரத்து 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 956, காரைக்காலில் 126, ஏனாமில் 7, மாகியில் 18 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை  பெற்று வருகின்றனர். 

புதுவையில் 135, காரைக் காலில் 15, ஏனாமில்1, மாகியில் 16 பேர் என 167 பேர் தொற்றுடன்   மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவையில் 23, காரைக் காலில் 2, மாகியில் 15 பேர் என 40 பேர் சிகிச்சையில்   குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 866 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து  27 ஆயிரத்து 713 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

புதுவையில் 3  ஆயிரத்து 486,  காரைக்காலில் 525, ஏனாமில் 20, மாகியில் 72 பேர் என 4 ஆயிரத்து 103 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

புதுவை மாநிலத்தில் இப்போது 34ஆயிரத்து 270 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 883 ஆக உள்ளது.  

புதுவையில்  2&வது தவணை  உட்பட 14 லட்சத்து 91 ஆயிரத்து 798 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை  சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டின் புதிய உச்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News