செய்திகள்
கைது

கீரிப்பாறை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளி கைது

Published On 2021-03-02 11:24 GMT   |   Update On 2021-03-02 11:24 GMT
கீரிப்பாறை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்:

கீரிப்பாறை அருகே தடிக்காரன்கோணம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 32), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

முருகன், ஒரு பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமானார். இதை அறிந்த குடும்பத்தினர் கீரிப்பாறை போலீசில் புகார் செய்தனர்.

இதற்கிடையே முருகன் அந்த மாணவியுடன் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, முருகன், அந்த மாணவியுடன் கேரளாவில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே, போலீசார் கேரளாவுக்கு சென்று மாணவியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அத்துடன் முருகனை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், முருகனை நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News