உள்ளூர் செய்திகள்
மாநில வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வள்ளலார் பேரவை பாராட்டு

Published On 2022-05-05 08:18 GMT   |   Update On 2022-05-05 08:18 GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வள்ளலார் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.
நாகர்கோவில்:

வள்ளல் பெருமானார் தருமச்சாலை தொடங்கிய 156-வது ஆண்டு தொடக்க மும், வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காண்பித்த 152-வது ஆண்டும் சேர்த்து 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் பெருமான் முப்பெரும் விழா நடைபெறும் என்று சட்டசபையில் இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு  மற்றும் இந்து சமய அறநி லைத்துறை ஆணையர் ஆகியோருக்கும்  அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாகவும், அகில உலக சன்மார்க்க சாதுக்கள் சார்பாகவும், தமிழக வள்ளலார் பேரவை சார்பாகவும் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து மாநில வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News