செய்திகள்
நாய்கள் கடித்ததில் ஆடு-கோழிகள் சாவு
உடுமலை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து தெருநாய்கள் கடித்து குதறியதில் ஆடு, கோழிகள் பலியாகின.
மடத்துக்குளம்:
உடுமலை அருகே உள்ள குறிஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சபரி மற்றும் சிவக்குமார் ஆகியோர் ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வந்தனர்.இவர்களது தோட்டத்தில் திடீரென புகுந்த 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கோழிகள் மற்றும் ஆடுகளை கடித்து குதறியது. இதில் 13ஆடுகள், 40 கோழிகள் இறந்தன. இதனால் விவசாயிகளுக்கு ரூ.2லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிஞ்சேரி பகுதியில் அதிகளவு தெருநாய்கள் சுற்றி கொண்டிருப்பதால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.