செய்திகள்

தண்டவாள பணியாளர்கள் மீது ரெயில் மோதி விபத்து - 3 பேர் பலி

Published On 2018-11-05 10:42 GMT   |   Update On 2018-11-05 10:42 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சன்திலா - உமர்தலி வழியே வந்த ரெயில், தண்டவாளத்தில் பணியில் இருந்த 3 பேர் மீது மோதியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #TrainAccident #UttarPradesh
லக்னோ:

கொல்கத்தா - அமிர்தசரஸ் இடையே இயக்கப்படும் அகல் டக்த் எக்ஸ்பிரஸ் இன்று நண்பகல் நேரத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சன்திலா - உமர்தலி இடையே சென்று கொண்டு இருந்தது. அப்போது தண்டவாளத்தின் சீரமைப்பு பணியில் இருந்த 3 ஊழியர்கள் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டனர். மேலும், விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



உயிரிழந்த 3 ஊழியர்களும் எவ்வித தடுப்புகளோ, முன்னறிவிப்போ அளிக்காமல் இருந்ததாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TrainAccident #UttarPradesh
Tags:    

Similar News