செய்திகள்
காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,330 மதுபாட்டில்கள் பறிமுதல்
காரியாபட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,330 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி:
காரியாபட்டி அருகே ஆவியூர் விவசாய தோட்டப்பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் ஆவியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது ஆவியூர் தோட்டத்து பகுதியில் இருந்த ஒரு அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 700 மதுபாட்டில்களையும், ஆவியூர் காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 630 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்த மர்மநபர் யார்? என ஆவியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.