செய்திகள்
திருத்துறைப்பூண்டியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருத்துறைப்பூண்டியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எம்.எஸ்.காலனி ஆஸ்பிட்டல் தெருவில் வசித்து வருபவர் கதிர்வேல். இவரது மகள் காயத்ரி (வயது 24). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற காயத்ரி, அங்கு விடுமுறை கேட்டு விட்டு தனது வீட்டுக்கு சென்றார்.
பின்னர் மாலையில் காயத்ரியின் உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மின் விசிறியில் காயத்ரி பிணமாக தொங்குவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயத்ரி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.