செய்திகள்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் -சட்டசபையில் தீர்மானம்
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடந்தது. அதைத்தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்றது.
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1987ம் ஆண்டு முதல் 9 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இப்போது 10வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.