செய்திகள்
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் சைனாபோரா பகுதியில் உள்ள காஷ்வா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டது. இதை அறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் நடத்தினர். இதில் பயங்கரவாதி அனயத் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும் கொல்லப்பட்ட பயங்கரவாதி எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் சைனாபோரா பகுதியில் உள்ள காஷ்வா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டது. இதை அறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் நடத்தினர். இதில் பயங்கரவாதி அனயத் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும் கொல்லப்பட்ட பயங்கரவாதி எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.