திருக்காட்டுப்பள்ளியில் கல்லூரி மாணவர் தற்கொலை
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பாலாஜி நகரைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவரது மகன் சரவணன்(வயது 19). இவர் திருச்சி துவாக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை விரும்புவதாகவும். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தன் தாயாரிடம் கூறியுள்ளார். தாய் கலைச்செல்வி படிக்கிற வயது இது. திருமணம் செய்யும் வயதில்லை. படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்று கூறியுள்ளார். இதில் மனமுடைந்த சரவணன் சம்பவத்தன்று எலிபேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சரவணனின் தாய் கலைச்செல்வி திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்