லைஃப்ஸ்டைல்
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தியாகங்கள்

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தியாகங்கள்

Published On 2021-03-04 04:22 GMT   |   Update On 2021-03-04 04:22 GMT
உங்க குழந்தைக்காக ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்யும் பெற்றோரா நீங்கள்? அப்ப இந்த பதிவு உங்களுக்காக தான் பெற்றோர்களே....
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள். அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருப்பார்கள். குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். அப்படி உங்க குழந்தைக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோரா நீங்கள்? நீங்கள் இப்படி நடந்து கொள்வதால் என்ன நன்மைகள் உண்டாகிறது என்பதை பார்க்கலாம்.

ஒரு பெற்றோராக உங்கள் அனுபவங்கள் எப்பொழுதும் தனித்தன்மை உடன் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நல்ல பெற்றோரின் முக்கிய தூண்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

* பெற்றோர் குழந்தைக்கு ஒரு உறவாக இருக்க வேண்டும். குழந்தைகளை தனித்துவமான நபராக கருத வேண்டும். அவர்கள் உங்களுக்கு ஏதேனும் விஷயங்கள் கற்பித்தால் அதையும் ஏற்றுக் கொள்ள மனம் திறந்திருக்க வேண்டும்.

* ஒரு பெற்றோராக உங்கள் ஈகோ, ஆசைகள் மற்றும் இணைப்புகளை விட்டு விட வேண்டும்.

* உங்க குழந்தைகள் மீது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நடத்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரு பெற்றோராக அதை எப்படி சொல்லிக் கொடுக்கலாம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

* நேரத்திற்கு முன்னால் திட்டமிட்டு நேர்மறையான எண்ணங்களை உங்க குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

* குழந்தைகள் அவர்கள் போராட்டத்தின் மூலமே வளர வேண்டும். பெற்றோரின் நோக்கம் உங்கள் குழந்தையை மகிழ்விப்பது மட்டுமல்ல.

விழிப்புடைய பெற்றோர்கள் எப்பொழுதும் நினைவாற்றலுடனும், சுய பிரதிபலிப்புடனும் நடந்து கொள்வார்கள். இது பெற்றோரின் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.

விழிப்புடைய பெற்றோர்கள் குறைவான எரிச்சலைக் கொண்டு குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவழிக்க முன் வருவார்கள். விழிப்புடைய பெற்றோர்கள் குழந்தைகளுடான தகவல் தொடர்புகளை கூடுதலாக வைத்து இருப்பார்கள். குழந்தைகளை தனிபட்ட நபராக ஏற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் குழந்தையுடன் ஒரு குறிப்பிட்ட மரியாதையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இது குழந்தைக்கு ஆரோக்கியமான உறவு பழக்கத்தை உருவாக்க உதவுகிறது. இது அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவி செய்கிறது.

இருப்பினும் நீங்கள் இப்படி இருப்பது எல்லா நேரங்களிலும் சிறந்த தீர்வாக இருக்காது. நீங்கள் ஒரு சுய பிரதிபலிப்பு மற்றும் கட்டுப்பாட்டை அடைய நிறைய நேரம் ஆகலாம். உங்கள் குழந்தை சுயமாக நடந்து கொள்வது என்பது ஒரே நாளில் நடக்காது. விழிப்புடைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தாங்கள் செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள அனுமதிக்கின்றனர். இருப்பினும் குழந்தையை தோல்வியடைய அனுமதிப்பது சில நேரங்களில் அது பெற்றோரை கடினமாகவும் குழப்பமாகவும் மாற்றும். குழந்தை தோல்வியை அனுபவிப்பதை பார்ப்பது பெற்றோருக்கு கடினம் தான்.

விழிப்புடைய பெற்றோர்களை பற்றி பேசுவது எளிது. ஆனால் அந்த குணநலன்களை நடைமுறையில் கடைபிடிப்பது சற்று கடினம். நீங்களும் விழிப்புடைய பெற்றோராக இருக்க என்ன செய்யலாம்? ஆத்திரத்துடன் செயல்படாதீர்கள். உடனடி தண்டனையை வழங்குவதற்கு பதிலாக அல்லது குழந்தையின் மீது பழியை சுமத்தும் முன் ஒரு நொடி மூச்சு விடுங்கள். ரிலாக்ஸ் ஆகி கொள்ளுங்கள்.

உங்கள் சொந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். உங்க குழந்தைகளை அவர்கள் சொந்தமாக கண்டறிய அனுமதிக்க வேண்டும்.
Tags:    

Similar News