ஆன்மிகம்
அழகர்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

அழகர்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Published On 2020-09-11 06:36 GMT   |   Update On 2020-09-11 06:36 GMT
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதில் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், பால், தேன் மற்றும் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும், அலங்கார திருமஞ்சனமும் நடந்தது.

தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் காட்சி தந்த கிருஷ்ண பகவானுக்கு தீபாராதனைகள் நடந்தன. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அழகர்கோவில் வட்டார யாதவர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News