செய்திகள்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,872 பேருக்கு கொரோனா
ஆந்திராவில் தற்போதுவரை 1,45,510 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,872 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 8,976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 4104 அளவிற்கு குறைந்துள்ளது.
இன்று 13,702 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 16,37,149 பேர் குணமடைந்துள்ள நிலையில், 11552 பேர் உயிரிழந்துள்ளனர். 1,14,510 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.