செய்திகள்
பட்ஜெட் தாக்கல், விவசாயிகள் போராட்டத்திற்கு இடையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற கூட்டம் வருகிற 29-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றுகிறார். அதன்பின் பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தற்போது விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய டிராக்டர் பேரணியில் சில பகுதியில் வன்முறை ஏற்பட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் மற்றும் விவசாயிகள் கோரிக்கை குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது.