உள்ளூர் செய்திகள்
.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 228 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-01-13 14:42 GMT   |   Update On 2022-01-13 14:54 GMT
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்  228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 429 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே இன்று மாவட்டத்தில் 37 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 54 ஆயிரத்து 234 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 673 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 522 பேர் பலியாகி உள்ளனர்.  
Tags:    

Similar News