செய்திகள்
தற்கொலை

கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2021-10-11 11:06 GMT   |   Update On 2021-10-11 11:06 GMT
கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 33). இவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News