ஆன்மிகம்
சீனிவாசமங்காபுரம் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு புண்ணியாவதனம், பஞ்சகண்யாரதானம், ரக்ஷாபந்தனம் ஆகியவை நடந்தது.
உற்சவ மூர்த்திகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பவித்ர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
உற்சவ மூர்த்திகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பவித்ர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.