செய்திகள்
தாய்க்கு மோடி எழுதிய கடிதங்கள் நாளை புத்தகமாக வெளியிடப்படுகிறது
பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு நாளை ஆங்கில புத்தகமாக வெளியிடப்படுகிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு நிறைய கடிதங்கள் எழுதி இருந்தார். அந்த கடிதங்கள் அனைத்தும் சோமைய்யா என்பவர் மூலம் தொகுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கடித தொகுப்பு குஜராத் மொழியில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
இதற்கிடையே அந்த குஜராத்தி புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து உள்ளன.
நாளை (வியாழக்கிழமை) பிரதமர் மோடிக்கு 70-வது பிறந்தநாளாகும். இதையொட்டி மோடி, தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஆங்கில புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது.
‘லெட்டர்ஸ் டூ மதர்’ என்று அந்த புத்தகத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு நிறைய கடிதங்கள் எழுதி இருந்தார். அந்த கடிதங்கள் அனைத்தும் சோமைய்யா என்பவர் மூலம் தொகுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கடித தொகுப்பு குஜராத் மொழியில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
இதற்கிடையே அந்த குஜராத்தி புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து உள்ளன.
நாளை (வியாழக்கிழமை) பிரதமர் மோடிக்கு 70-வது பிறந்தநாளாகும். இதையொட்டி மோடி, தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஆங்கில புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது.
‘லெட்டர்ஸ் டூ மதர்’ என்று அந்த புத்தகத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது.