செய்திகள்
கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது

Published On 2020-12-18 10:11 GMT   |   Update On 2020-12-18 10:11 GMT
பொள்ளாச்சி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்தவர் தினேஷ்(வயது 19). இவருக்கும், வேறொரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் திருமண ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ் கடத்தி சென்றார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கோபாலபுரம் பகுதியில் பதுங்கி இருந்த தினேசை பிடித்தனர். மேலும் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், சிறுமியை தினேஷ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News