செய்திகள்
கோவில்பட்டி அருகே நகராட்சி ஊழியர் தற்கொலை
கோவில்பட்டி அருகே நகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 28). இவர் கோவில்பட்டி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் குப்பை வண்டி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று கிருஷ்ணசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 28). இவர் கோவில்பட்டி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் குப்பை வண்டி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று கிருஷ்ணசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.