லைஃப்ஸ்டைல்
கருவளையம்

ஒரே வாரத்தில் கருவளையம் மறைய வேண்டுமா? இத யூஸ் பண்ணுங்க...

Published On 2021-03-10 07:30 GMT   |   Update On 2021-03-10 07:30 GMT
வந்த கருவளையத்தை போக்க அன்றாட உணவில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும். அதனுடன் இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் ஒரே வாரத்தில் கருவளையத்தை விரட்டி அடிக்கலாம்.
உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. அதற்கு காரணம் கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையம்.

உருளைக்கிழங்கை அரைத்து கண்களை சுற்றி பூசி வந்தால் கருவளையம் படிப்படியாக மறையும்.

கண்களை குளிர்விக்கும் வகையில் கேரட் அல்லது வெள்ளரிக்காய் பிஞ்சை நறுக்கி வாரம் ஒன்றிரண்டு முறை கண்களின் மேல் வைத்தால் நல்ல பலனளிக்கும்.

தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறை கலந்து கருவளையத்தின் மீது பூசி வர வேண்டும். பூசிய 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் படிப்படியாக கருவளையம் நீங்கி அழகு பெறலாம்.

இரவில் கண்களை சுற்றி பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களை கழுவி வந்தால் கருவளையத்திலிருந்து விடுதலை பெறலாம்.

வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும். அதன் பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் நல்ல தூக்கமும், கண்களுக்கு தேவையான அளவு ஓய்வும் கொடுத்தால் கருவளையத்திற்கு சீக்கிரமே டாட்டா சொல்லிவிடலாம்.
Tags:    

Similar News